அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வே ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள இணைத்தூதரகம் ஆகியவற்றை இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்திற் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை 63 தூதரகங்களை பராமரித்து வருகிறது, இந்த மூன்று அலுவலகங்களும் மூடப்படுவதால் அவை 60 ஆக குறைக்கப்படும். டொலர் நெருக்கடி காரணமாக 60 இலங்கை தூதரகங்களின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)