டொலர் தட்டுப்பாடு காரணமாக மூன்று தூதரகங்களுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் தட்டுப்பாடு காரணமாக மூன்று தூதரகங்களுக்கு பூட்டு!

டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்கள் மற்றும் இணைத்துாதரக அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வே ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள இணைத்தூதரகம் ஆகியவற்றை இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்திற் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கை 63 தூதரகங்களை பராமரித்து வருகிறது, இந்த மூன்று அலுவலகங்களும் மூடப்படுவதால் அவை 60 ஆக குறைக்கப்படும். டொலர் நெருக்கடி காரணமாக 60 இலங்கை தூதரகங்களின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.