தொடர்ச்சியாக எரிபொருளினை இலங்கைக்கு வழங்க மறுத்த இந்தியா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடர்ச்சியாக எரிபொருளினை இலங்கைக்கு வழங்க மறுத்த இந்தியா!

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி. கே.டி.ஆர் ஓல்கா குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற சப்ளையர்களிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய டெண்டர் கோரப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிச் வந்த கப்பல் நாட்டை வந்துள்ளததோடு, டீசல் மற்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் நாட்டுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக குறிப்பிட்டார். 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே அவற்றைக் கொள்வனவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.