பொருளாதார நெருக்கடி; இந்தியா தப்பிச்சென்ற ஆறு இலங்கையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடி; இந்தியா தப்பிச்சென்ற ஆறு இலங்கையர்கள்!




பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆறு இலங்கையர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.


இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இந்தியாவின் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகில் உள்ளதால், இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி வழியாகத் தமிழகத்துக்குத் தப்பிச் சென்று மறுவாழ்வு முகாம்களில் தங்கினர்.


இந்நிலையில், மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிக்ளரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட நான்கு மாத கைக்குழந்தை உட்பட 06 பேர் நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இன்று (22) அதிகாலை 1.00 மணியளவில் தனுஷ்கோடிக்கு அருகில் வந்துள்ளனர்.


இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் இலங்கை தமிழர்களை சிறைபிடித்தது. அவர்கள் அளித்த அறிக்கையில், அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக தப்பி வந்ததாக தெரிவித்தனர்.


அனுமதியின்றி தமிழகத்திற்குள் பிரவேசித்த 6 இலங்கையர்கள் மீது இந்திய மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.