கண்டியில் எரிபொருள் வரிசையில் இருந்த நபரொருவர் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் எரிபொருள் வரிசையில் இருந்த நபரொருவர் மரணம்!


மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயது முதியவர் வெப்பக் களைப்பு காரணமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் இன்று (19) பதிவாகியுள்ளது.


மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.