மலசலகூடக் குழியில் யுவதியின் சடலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலசலகூடக் குழியில் யுவதியின் சடலம்!


பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இன்று (29) பிற்பகல் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என்.சில்வா முன்னிலையில் கழிவறை குழியின் கொங்கிறீட் மூடியை திறந்து பார்த்ததன் பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கடவத்தையைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பாணந்துறை கீல்ஸ் வீடமைப்பு வீதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலின் மலசலகூட குழியில் பெண் ஒருவரின் சடலம் உள்ளதாக ஹோட்டல் உரிமையாளரால் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மலசலகூட குழியில் இருந்து கைக்கடிகாரம், கையடக்கத் தொலைபேசி சார்ஜர், கூரிய கத்தி, ஒரு ஜோடி காலணிகள், ஆணுறை, துண்டு, விரிப்பு மற்றும் பல துணித் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஹோட்டலின் முகாமையாளரும் இரண்டு ஹோட்டல் ஊழியர்களும் நேற்று (28) காலை ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், ஊழியர்கள் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஹோட்டல் முகாமையாளர் உட்பட 3 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடைய பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 25ஆம் திகதி இரவு கடவத்தையில் உள்ள இரவு விடுதிக்கு சென்ற ஹோட்டல் முகாமையாளர் உள்ளிட்ட சிலருடன் குறித்த யுவதிக்கு பழக்கம் ஏற்பட யுவதியை அவர்கள் பாணந்துறை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


சந்தேகநபர்கள் யுவதியை ஹோட்டலின் மேல் மாடியில் உள்ள 605ஆம் இலக்க அறையில் தங்க வைத்து அவ்வப்போது அவளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.