பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து மேலுமொரு படையணி - பின்னணியில் பிரபல தேரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து மேலுமொரு படையணி - பின்னணியில் பிரபல தேரர்!

அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவை நீக்கி தனியாக ஒரு படையை கட்டியெழுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலை வகித்து வருவதாகவும், இதற்கு பிரபல பிக்கு ஒருவரும் உதவி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பதவிகள் கிடைக்காமை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடாமை போன்ற அரசாங்கத்தின் பங்களிப்பால் விரக்தியடைந்துள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தக் குழு கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.