உணவுப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உணவுப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு!

உணவுப் பொதி ஒன்றின் விலை 20 அல்லது 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோது, ​​பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொத்து உள்ளிட்ட துரித உணவுப் பொருட்களின் விலைகள் 5 அல்லது 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.