ஜனாதிபதியின் பேஸ்புக் இடுகைகளில் கமெண்ட் பகுதிக்கு கட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் பேஸ்புக் இடுகைகளில் கமெண்ட் பகுதிக்கு கட்டுப்பாடு!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இருந்து கருத்துக்கள் தெரிவிக்கும் கமெண்ட்ஸ் பகுதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

"நேற்றிரவு முதல், ஜனாதிபதி ராஜபக்சவின் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவுகளில் பயனர்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை.

கடந்த 26 ஜனவரி 2010 முதல் எம்.பி.க்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் பேஸ்புக் கணக்குகளை நான் ஆய்வு செய்தேன். இதற்கு முன் யாரும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் கருத்துகளை தெரிவிக்கும் பக்கத்தை கட்டுப்படுத்தவில்லை.

 ஆபத்தான தள்ளுமுள்ளு மற்றும் அதிகரித்து வரும் கோபத்தைப் பிரதிபலிக்கும் பொதுக் கருத்துக்களை வெளியிட அனுமதிக்காத இலங்கையின் முதல் அரசியல்வாதி எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார்."

இவ்வாறு சமூக ஊடக நிபுணர் டாக்டர். சஞ்சன ஹட்டொடுவ ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.