மின்வெட்டு 15 மணித்தியாலங்களாக உயர்வு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்வெட்டு 15 மணித்தியாலங்களாக உயர்வு?

இன்றைய தினம் அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய பொறியியலாளர்கள் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் மின் தடை ஏற்பட உள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் ஊடாக 165 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்படுவதால், நாட்டில் தேவையான மின்சாரத்தின் அளவில் 165 மெகா வோட் மின்சாரம் இழக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மாத்திரமே முழுமையானளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.