இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயற்பாடாக காட்டப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் பாரிய அரசியல் சூழ்ச்சி! -கர்தினால் மெல்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயற்பாடாக காட்டப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் பாரிய அரசியல் சூழ்ச்சி! -கர்தினால் மெல்கம்


மனித உரிமைகள் பேரவையின் 2021ஆம் ஆண்டு மாநாட்டின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையிலான ஆதாரங்களைத் திரட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


49ஆவது மனித உரிமைகள் பேரவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த தக்குதல் நடத்தப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் இன்னும் இதற்கு நீதி வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக நீதிகோருகின்றவர்கள் துன்புறுத்தப்படும் நிலைமையே காணப்படுகிறது.


சில இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயற்பாடாக காட்டப்பட்ட போதிலும் அது பாரிய அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி என விசாரணைகளில் தெரியவந்தது.


எனவே ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.