சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்!

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஒரு நாள் இருதரப்பு விஜயமாக நேற்று (13) இலங்கை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹார்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இராச்சிய தூதரகத்தின் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.

சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இன்று தனது விஜயத்தை முடித்துக் கொண்டதையடுத்து, நேபாளம் செல்லவுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.