இன்றுடன் முடிவடையும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றுடன் முடிவடையும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்!


லிட்ரோ கேஸ் லங்கா வசம் இருக்கும் எரிவாயு இருப்பு நாளை (22) இரவுக்குள் முடிவடையும் என்று எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இன்று இரவு வரை எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும், நாளை 100,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.


3500 மெட்ரிக் தொன் திரவ வாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று (21) இரவு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


இலங்கையின் மாதாந்த எரிவாயு தேவை 35,000 மெட்ரிக் டன் எனவும், மாதாந்தம் 10,000 மெட்ரிக் டன் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


இன்றும் நாடு முழுவதும் காஸ் சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஏறக்குறைய 500 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பட்ட போதிலும், சில சில்லறை விற்பனையாளர்கள் 50 சிலிண்டர்களை மட்டுமே விநியோகம் செய்து பொதுமக்களிடையே பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.