உக்ரைன் - ரஷ்யா போர்; இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரைன் - ரஷ்யா போர்; இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன் ஆரம்பம்!


உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது எட்டாவது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. 


இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது.  


இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.


இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் துவங்கியுள்ளது. 


கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.