மீண்டும் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்? பிரித்தானிய அரசு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்? பிரித்தானிய அரசு எச்சரிக்கை!


இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டால், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு நிலவுவதை கவனத்தில் கொள்ளுமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய பணத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நிலைமை சீரழிந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


வழமையான மின்வெட்டு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனவும், வெளிநாட்டு சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.