எரிபொருளை வீணடிக்கும் செயலான கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் - வாகன பேரணி தொடர்பில் பதிலளித்த நாமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருளை வீணடிக்கும் செயலான கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் - வாகன பேரணி தொடர்பில் பதிலளித்த நாமல்!


கொழும்பு - புத்தளம் வீதியில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.


"இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் - வாகன பேரணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத தனியார் நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியானது, நாட்டின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான வாகனங்களை ஓட்டியதாகவும், எரிபொருளை வீணடிப்பதாகவும் குற்றம் சுமத்தி பொதுமக்களின் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டது.


மேலும் இது ஒரு தொண்டு நிறுவனத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.