உறைந்த உணவுப் பொருட்களின் நுகர்வு - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உறைந்த உணவுப் பொருட்களின் நுகர்வு - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிவிப்பு!

சந்தையில் தரமற்ற உறைந்த உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் சேமிக்கப்படும் உணவின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தையில் உறைந்த உணவுகளை வாங்கும் போது நுகர்வோர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரங்களில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளில் சேமிக்கப்படும் இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரம் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.