காகித இறக்குமதிக்கு டொலர் இல்லை - பாடசாலை புத்தக அச்சிடும் பணி இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காகித இறக்குமதிக்கு டொலர் இல்லை - பாடசாலை புத்தக அச்சிடும் பணி இடைநிறுத்தம்!

காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்களிடம் காகிதங்கள் இல்லாததால், கல்வியாண்டுகளுக்கான பாட புத்தகங்களை அச்சிட முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

பாடசாலை பாடப் புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் காகிதம் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் டன் காகிதத்தின் விலை ரூ. 200,000 இலிருந்து அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதே கூட்டுத்தாபனத்தின் முக்கிய வருமானம் என்றும், அதை இழந்தால் நிறுவனத்துக்கு சுமார் 1,200 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரச நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு லொத்தர்கள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக காகித இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.