இலங்கை தனது தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளிக்கும் என நாம் நம்புகிறோம்! -சீனா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தனது தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளிக்கும் என நாம் நம்புகிறோம்! -சீனா


இலங்கை தனது தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளிக்கும் என நம்புவதாக இலங்கைக்கான சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.


நேற்று (09) இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.


"இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயட்சியுடன், நாடு எதிர்கொள்ளும் தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து மேலும் பெரிய வளர்ச்சியைத் தழுவும் என்று நம்புகிறோம்" என தூதரகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.


சீனாவும் இலங்கையும் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததிலிருந்து தமது பரஸ்பர புரிந்துணர்வை வெளிப்படுத்தி, இரு நாட்டுக்குமிடையில் ஆதரவை வழங்கி வருவதாக செய்தியாளர் சந்திப்பின் போது ​​சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.


மேலும் இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது திறனை அனுமதிக்கும் வகையில் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.