நாட்டில் குறைந்த சதவீத மக்களே டீசல் பெற்றோலை பயன்படுத்துவதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே வாகனம் இல்லாத அப்பாவி ஏழை மக்கள் இதற்காக வந்தி செலுத்த அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வாகன உரிமையாளர்கள் அதற்கான சுமையைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
இன்று எரிபொருள் மற்றும் பால் மாவுக்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டி குற்றம் சாட்டுவதாகவும், இன்னும் பத்து மாதங்களில் இந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)