சர்வதேச கிரிக்கெட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ள பல விதிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச கிரிக்கெட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ள பல விதிகள்!


கிரிக்கெட் விதிகளை கையாளும் Marylebone Cricket Club, சர்வதேச கிரிக்கெட்டின் பல விதிகளை திருத்த முடிவு செய்துள்ளது.


அந்த விதிகள் இந்த ஆண்டு அக்டோபர் 01ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.


அதன்படி, ஒரு பேட்ஸ்மேன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தால், அவருக்கு அடுத்து வரும் புதிய பேட்ஸ்மேன், ஓவர் முடியாவிட்டால் மட்டுமே அடுத்த பந்தை எதிர்கொள்ள முடியும்.


தற்போதைய சட்டத்தின்படி, பந்தை மேலே அடித்துவிட்டு ரன் எடுக்கும் நிலையில் பேட்ஸ்மேன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தால், அடுத்த பந்தை களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர்கொள்ள வேண்டும். 


அதுபோன்று, பந்து வீச்சாளர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் பந்து வீசப்படும் போது எல்லைக் கோட்டைத் தாண்டும்போது விக்கெட்டை உடைக்கும் மான்கார்ட் முறையையும், அவர் ரன் எடுக்கும்போது பேட்ஸ்மேனை அவுட் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் கோவிட் காரணமாக பந்தை எச்சில் துப்பி சேதப்படுத்தும் தற்காலிக தடையை நிரந்தர தடையாக மாற்றவும் Marylebone Cricket Club நடவடிக்கை எடுத்துள்ளது.


மைதானத்தில் ஏதேனும் விலங்கு அல்லது நபர் இரு அணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருந்தால், பந்தை No Ball பந்தாக சமிக்ஞை செய்யும் திறனும் நடுவருக்கு உள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.