ரூ. 200 ஐ கடந்த ஒரு கிலோ உள்நாட்டு அரிசி விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 200 ஐ கடந்த ஒரு கிலோ உள்நாட்டு அரிசி விலை!

பொலன்னறுவையில் உள்ள முன்னணி அரிசி வியாபாரிகள் வாராந்த அரிசி விலையை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.

பொலன்னறுவையின் முன்னணி அரிசி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அரலிய நிறுவனம், கடந்த மார்ச் 12 ஆம் திகதி ரூ. 180 இற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, மார்ச் 22 ஆம் திகதி ரூ. 205 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி ரூ. 25 விலை உயர்வு பதிவாகியுள்ளது.

மார்ச் 12 ஆம் திகதி ரூ. ஒரு கிலோ நாட்டு அரிசி ரூ. 175 இற்கு விற்கப்பட்ட போது மார்ச் 22 ஆம் திகதி ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டது.


மேலும் மார்ச் 12ஆம் திகதி ரூ. 175 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி மார்ச் 22 அன்று விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி ரூ. 200/- ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.


மார்ச் 12 ஆம் திகதி விற்கப்பட்ட சிவப்பு பச்சை அரிசி ரூ. 180 இற்கு விற்கப்பட்ட போது, மார்ச் 22 ஆம் திகதி ரூ. 205 ஆக உயர்த்தப்பட்டது.

அரசினால் நெல்லுக்கான உத்தரவாத கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே அரிசியின் விலையை அதிகரிக்கச் செய்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.