
பொலன்னறுவையின் முன்னணி அரிசி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அரலிய நிறுவனம், கடந்த மார்ச் 12 ஆம் திகதி ரூ. 180 இற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, மார்ச் 22 ஆம் திகதி ரூ. 205 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி ரூ. 25 விலை உயர்வு பதிவாகியுள்ளது.
மார்ச் 12 ஆம் திகதி ரூ. ஒரு கிலோ நாட்டு அரிசி ரூ. 175 இற்கு விற்கப்பட்ட போது மார்ச் 22 ஆம் திகதி ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் மார்ச் 12ஆம் திகதி ரூ. 175 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி மார்ச் 22 அன்று விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி ரூ. 200/- ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் 12 ஆம் திகதி விற்கப்பட்ட சிவப்பு பச்சை அரிசி ரூ. 180 இற்கு விற்கப்பட்ட போது, மார்ச் 22 ஆம் திகதி ரூ. 205 ஆக உயர்த்தப்பட்டது.
அரசினால் நெல்லுக்கான உத்தரவாத கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே அரிசியின் விலையை அதிகரிக்கச் செய்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)