இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு தாம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.128, பெட்ரோலுக்கு ரூ.80 எனும் வீதத்தில் இழப்பு ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான நஷ்டத்தை அரசாங்கத்துக்கு தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், விலைவாசி உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)