தேசிய மின்வட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு (08) நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய மின்வட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு (08) நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

தேசிய மின்வட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு (08) எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 424 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் A மற்றும் B பிரிவுகள் மாத்திரமே செயற்படுவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நாப்தாவிற்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாகவும், இன்று மின்சாரம் உற்பத்திக்கு போதுமானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.