செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 424 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் A மற்றும் B பிரிவுகள் மாத்திரமே செயற்படுவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நாப்தாவிற்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாகவும், இன்று மின்சாரம் உற்பத்திக்கு போதுமானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)