ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹோட்டலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த குழுவினர் ஹோட்டலின் தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)