இனி துபாய் செல்லும் இலங்கையர்களுக்கு ராபிட் பிசிஆர் தேவையில்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி துபாய் செல்லும் இலங்கையர்களுக்கு ராபிட் பிசிஆர் தேவையில்லை?


இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணிக்கும் போது ராபிட் பிசிஆர் பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இலங்கை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்த்துக்கு பயணிக்கும் பயணிகள் இனி புறப்படுவதற்கு முன் Rapid PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று துபாய் விமான நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக, இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகள் தங்கள் விமான நேரத்துக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னரான பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.


மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (22) காலை 8.00 மணிக்கு நடைமுறைக்கு வந்தன.


இப்போது பயணிகள் பயணம் செய்ய 48 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், மேலும் துபாயில் வந்தவுடன் மீண்டும் ஒரு PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதிர்மறையான முடிவு வரும் வரை பயணிகள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.