இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணிக்கும் போது ராபிட் பிசிஆர் பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்த்துக்கு பயணிக்கும் பயணிகள் இனி புறப்படுவதற்கு முன் Rapid PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று துபாய் விமான நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகள் தங்கள் விமான நேரத்துக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னரான பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.
மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (22) காலை 8.00 மணிக்கு நடைமுறைக்கு வந்தன.
இப்போது பயணிகள் பயணம் செய்ய 48 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், மேலும் துபாயில் வந்தவுடன் மீண்டும் ஒரு PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதிர்மறையான முடிவு வரும் வரை பயணிகள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். (யாழ் நியூஸ்)