BREAKING: இனி மின்வெட்டு இருக்காது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: இனி மின்வெட்டு இருக்காது!


எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அறிவித்துள்ளது.

PUCSL இன் புதிய வழிமுறையின் காரணமாக திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் விதிக்கப்படாது என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மின்வெட்டை அமுல்படுத்துவது உடனடியானது என ஜனக ரத்நாயக்க இன்று (15) முற்பகல் எச்சரித்துள்ளார்.

மேலும் அதற்கான பொறிமுறையை நாளடைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இதேவேளை, களனிதிஸ்ஸ சொஜிட்ஸ் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையும் தெரிவித்திருந்தது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஆலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இலங்கை மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.