தற்கொலையில் நிறைவேறிய காதல்! காதலர் தினத்தில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலையில் நிறைவேறிய காதல்! காதலர் தினத்தில் சம்பவம்!


மொனராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரிஅராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (14) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த மாணவனின் தற்கொலைக்கு காதல் விவகாரமே காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் 12ஆம் ஆண்டு கல்வி கற்கும் கே.ஜி. அகில டில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.