பொலிஸ் கான்ஸ்டபிள் அடித்துக் கொலை தொடர்பில் மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் கான்ஸ்டபிள் அடித்துக் கொலை தொடர்பில் மூவர் கைது!


தங்கலை - விதாரந்தெனிய பகுதியில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் தங்காலை - வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மதுபோதையில் இருந்த, 15 பேர் கொண்ட குழுவினர், பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது சகோதரரையும் வீட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகவொன்றுக்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளாரென விசாரணைகளில் வெளிவந்துள்ளன.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தறபோது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.