ஒவ்வொரு வீட்டுக்கும் பணம் அச்சிடும் இயந்திரம் கொடுக்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒவ்வொரு வீட்டுக்கும் பணம் அச்சிடும் இயந்திரம் கொடுக்க வேண்டும்!


பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றால், ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிட அச்சகம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஒரு நாட்டை வளர்க்க முடியும் என்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் பணம் அச்சிடும் இயந்திரம் கொடுத்தால் முடிந்துவிடும். பணத்தை அச்சிடுவதைத் தவிர, நாட்டின் உற்பத்தியை மேம்படுத்த, முதலீட்டை அதிகரிக்க, பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. 

பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் 678 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 14% ஆக உயர்ந்துள்ளது என்றார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.