பிரதமரின் திருப்பதி ஜெட் விவகாரம்; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதமரை விசாரிக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் திருப்பதி ஜெட் விவகாரம்; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதமரை விசாரிக்க தீர்மானம்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த வருடம் இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு தனியார் ஜெட் விமானம் மூலம் பயணத்தை மேற்கொண்டது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது. 

இலஞ்சம் ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் விமானத்தை பரிசாக பெற்றுக்கொண்டு பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

2021 டிசம்பர் 31ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CIABOC செயலாளர் அப்சரா கல்தேரவின் கையொப்பமிடப்பட்ட 2022 பெப்ரவரி 2 ஆம் திகதிய கடிதத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடகவியலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது. 

ஜெட் பயணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவியதையடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.