பிரித்தானிய செல்ல இருப்போருக்கான நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரித்தானிய செல்ல இருப்போருக்கான நற்செய்தி!


வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனையை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.


முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக இந்த சலுகைகயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதற்கமைய முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், பிரித்தானியா வந்த பிறகு Lateral Flow எனப்படும் என்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்படுகின்றது.


பிரித்தானியா வரும் பயணிகள் இந்த Lateral Flow பரிசோதனைக்காக பயணிகள் 20 பவுண்ட் செலவிட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் பிரித்தானியா வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான தனிமைப்படுத்தலையும் அரசாங்கம் இரத்து செய்துள்ளது. தடுப்பூசி போடாத பயணிகள், இனி பிரித்தானியா வந்த பிறகு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்தள்ளது.


ஆனால், தடுப்பூசி போடாமல் பிரித்தானியா வரும் பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


அதேவேளை, விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்கள், அவர்கள் செல்லும் இடத்தில் அமுலில் இருக்கும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.