எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, எரிபொருள் விலையை மீளாய்வு செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என அமைச்சர் விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கான மின்சார வாரியத்தின் ரூ. 80 பில்லியன் கடனைத் தீர்க்க நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டது என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)