வாகன உரிமையாளர்களின் வாகனங்களை பெற்று பின்னர் அதனை விற்பனை செய்து பணம் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, ஜனபிரிய மாவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று நுகேகொட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அந்த நபர் வாகனங்களை விற்பனை செய்வதாக கூறி வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை பெற்று, விற்பனை பணத்தை உரிமையாளரிகளுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பில் ஒருவரிடமிருந்து 45 மில்லியன் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்றையும்,
அதுருகிரியவில் உள்ள ஒருவரிடமிருந்து 22.5 மில்லியன் ரூபா பெறுமதியான கேப் ரக கார் ஒன்றையும், அதுருகிரியவில் மேலுமொரு 18.5 மில்லியன் பெறுமதியான கார் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)