கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வாகன தரகர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வாகன தரகர் கைது!


வாகன உரிமையாளர்களின் வாகனங்களை பெற்று பின்னர் அதனை விற்பனை செய்து பணம் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ராகம, ஜனபிரிய மாவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று நுகேகொட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த அந்த நபர் வாகனங்களை விற்பனை செய்வதாக கூறி வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை பெற்று, விற்பனை பணத்தை உரிமையாளரிகளுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் நீர்கொழும்பில் ஒருவரிடமிருந்து 45 மில்லியன் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்றையும், 


அதுருகிரியவில் உள்ள ஒருவரிடமிருந்து 22.5 மில்லியன் ரூபா பெறுமதியான கேப் ரக கார் ஒன்றையும், அதுருகிரியவில் மேலுமொரு 18.5 மில்லியன் பெறுமதியான கார் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.