கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான துபாயில் பெட்ரோல் லீட்டரின் விலை இலங்கை ரூபா 154 எனவும், அங்கு பெற்றோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகளை அத்தகைய நாடுகளும் எதிர்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.
துபாய் இராச்சியத்தை விட நாட்டில் எரிபொருள் விலை குறைவாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)