வெளிநாடுகளுக்கு செல்பவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளுக்கு செல்பவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு போலியான எதிர்மறை பிசிஆர் சான்றிதழை அளித்த மோசடி தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் இலட்சினையைப் பயன்படுத்தி போலியான எதிர்மறையான பிசிஆர் சான்றிதழை தயாரித்த 27 வயதுடைய சந்தேக நபர் நீர்கொழும்பில் பெப்ரவரி 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் வட்ஸ்அப் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணையில் சந்தேக நபர் சுமார் 70 போலியான பிசிஆர் அறிக்கைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களில் இவரும் அடங்குவதாக கண்டறப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரை வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தையில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் 750 பயணிகளுக்கு போலியான எதிர்மறை பி சி ஆர் சான்றிதழை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட 33 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று களுத்துறை நாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபருக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.