பானுக ராஜபக்ச இந்தியாவுக்குச் செல்வதற்காக ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த போதிலும் பானுக ராஜபக்ச இந்திய தொடருக்கான டி20 அணியில் இடம்பெற மாட்டார் எந இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 2 கி.மீ உடற்தகுதிப் பரீட்சையில் பானுக ராஜபக்ச சித்தியடைந்த போதிலும், அதற்குத் தேவையான ஸ்கின்ஃபோல்ட் அளவை அவர் இன்னும் அடையவில்லை என்பதால், அவரை அழைத்துச் செல்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய டி20 தொடரில் பங்கேற்பதற்காக பானுக ராஜபக்ச பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடரில் இரும்து விலகி இலங்கை வந்தார்.
2022 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே இலங்கை பேட்ஸ்மேன் பானுக ராஜபக்ச, அவர் 50 இலட்ச இந்திய ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டார்.
இந்திய தொடருக்கான டி20 அணியை இலங்கை கிரிக்கெட் இன்னும் அறிவிக்கவில்லை. (யாழ் நியூஸ்)