உலகளாவிய மக்களுக்கு நீண்ட காலத்துக்கு பிறகு மகிழ்ச்சி தகவல்! உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகளாவிய மக்களுக்கு நீண்ட காலத்துக்கு பிறகு மகிழ்ச்சி தகவல்! உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!


கோவிட் வைரஸ் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். 


உலக மக்கள் தொகையில் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின் வெகு சீக்கிரத்தில் கோவிட் தொற்று முடிவுக்கு வந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  


நேற்றையதினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


இதனை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோமாயின், தீவிரமான கட்டம் உண்மையில் முடிவுக்கு வந்துவிடும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எமது கைகளிலேயே உள்ளது. இது வாய்ப்புக்கான விடயம் அல்ல.


இது தேர்வுக்கான விடயம் என்றார். 70 சதவீதமானோக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை, ஜூன் அல்லது ஜூலைக்குள் அடைய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு நிகழுமாயின் கோவிட் தொற்றின் தீவிர தாக்கத்தை நிச்சயமாக முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.