கணவரால் தீ வைக்கப்பட்ட பெண் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவரால் தீ வைக்கப்பட்ட பெண் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!


காலி, கோனாபினுவல பிரதேசத்தில் கணவரால் தீ வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் காவல்துறை சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.


பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.


கோனாபினுவல காவல்நிலையத்தில் சார்ஜன்டாக பணியாற்றிவந்த 35 வயதான குறித்த பெண், பணி முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவரால் எரியூட்டப்பட்டுள்ளாரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான சந்தேகநபரான கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


முன்னைய செய்தி: https://www.yazhnews.com/2022/02/blog-post_72.html


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.