கர்தினால் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் இடையிலான சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கர்தினால் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் இடையிலான சந்திப்பு!


பேராயர் கர்தினால் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.


நாட்டில் இருக்கும் குறைகளை பாப்பரசரிடம் எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வத்திக்கானுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.


நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து கடந்த ஜனவரி மாதம் பாப்பரசர் பிரான்சிஸ் கர்டினல் மால்கமுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.