பேராயர் கர்தினால் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.
நாட்டில் இருக்கும் குறைகளை பாப்பரசரிடம் எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வத்திக்கானுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து கடந்த ஜனவரி மாதம் பாப்பரசர் பிரான்சிஸ் கர்டினல் மால்கமுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)