நாளை நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு!

தென் மாகாணத்தில் நாளை (21) ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

இதன்படி நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக மின்வெட்டு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதனால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும், போதியளவு எண்ணெய் கையிருப்பு மற்றும் நிதி இருக்கு காரணத்தினால் நாளை (21) ஏனைய பிரதேசங்களில் மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.