உக்ரைன் - ரஷ்யா நேருக்கு நேர் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரைன் - ரஷ்யா நேருக்கு நேர் பேச்சுவார்த்தை ஆரம்பம்!



உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாவது நாளாக இன்று இரு நாடுகளின் பிரதிநிதிகளும் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.


பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.


இந்தப் பேச்சுவார்த்தையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அமைதி பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கி, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக கூறினார்.


இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய படைகள் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக உக்ரைனுக்கான உறுப்புரிமையை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.