தாயின் அனுமதியுடன் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாயின் அனுமதியுடன் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; நால்வர் கைது!


பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிசார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, வைத்தியர்களால் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 04 மாதம் கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 


அதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் பதுளையை சேர்ந்த 41 வயதுடைய 07 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை எனவும் மூன்றாவது சந்தேக நபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.