சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இரத்மலானை விமான நிலையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இரத்மலானை விமான நிலையம்!


இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.


தென்னிந்தியா மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமானங்கள் தொடங்கப்பட உள்ளன என்றார்.


இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக மேலும் பல சர்வதேச விமான நிறுவனங்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.