காதலினால் ஏற்பட்ட விபரீதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலினால் ஏற்பட்ட விபரீதம்!

காதல் தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் நேற்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடவத்தை ஆன்ட்ரூ ஒழுங்கை பிரதேசத்தில் நடந்துள்ளது.

பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கண்ணாடி துண்டால் நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 20 வயதான நபர் எனவும் அவர் கடவத்தை கோணஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் ராகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக கடவத்தை கண்டி வீதி இலக்கம் 19 என்ற விலாசத்தில் வசிக்கும் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கண்ணடி துண்டை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.