தேசிய மிருகக்காட்சிச்சாலை போராட்டம் : பணிப்பாளர் நாயகம் இரு வாரங்களுக்கு பணியில் இருந்து விலகல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய மிருகக்காட்சிச்சாலை போராட்டம் : பணிப்பாளர் நாயகம் இரு வாரங்களுக்கு பணியில் இருந்து விலகல்!

இரண்டு வாரங்களுக்கு பணியிலிருந்து விலகவுள்ளதாக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாசகாரர்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.

தற்போதைய பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் நேற்று மீண்டும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததை அடுத்து தொழிலாளர்கள் மூன்று நாள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இதேவேளை, மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச செய்தித்தாள் தினமின செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.