மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் உருவாகியுள்ளது - சஜித் பிரேமதாச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் உருவாகியுள்ளது - சஜித் பிரேமதாச

உள்நாட்டு விவசாயியை விட வெளிநாட்டு விவசாயியே அரசாங்கத்திற்கு விசேடமானவர் எனவும் இன்று அரசாங்கம் மக்களிடம் பணம் பறிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனையாக ஆரம்பிக்கப்பட்ட ‘சசுநட அருண’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்குட்பட்ட பெரகம 4 எல விசுத்தாராம ஆலயத்தில் கடந்த ஞாயிறு அன்று பாடசாலை கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.

நுகர்வுப் பொருட்களின் விலைகள் தன்னிச்சையாக அதிகரித்து வருவதாகவும், இவற்றிற்கு அரசாங்கம் பொறுப்பு கூறாது இருப்பதாகவும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சர்வாதிகார ஆட்சியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் நிர்க்கதியாகி இருப்பதாகவும், மக்களை அழிக்கவே இந்த அரசு உருவானது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.