இலங்கை நோக்கி படையெடுக்கும் உலகத் தலைவர்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை நோக்கி படையெடுக்கும் உலகத் தலைவர்கள்!!!

அரசாங்கம் சர்வதேச உறவுகளில் பலவீனமடைந்துள்ளதென கடந்த வாரங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர் ஆனால் இது முழுமையான பொய் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உலகத் தலைவர்கள் அதிகளவானோர் இலங்கைக்கு வருகைத் தந்த ஒரு மாதமாக இந்த மாதம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒரே மாதத்தில் அதிகளவான வெளிநாட்டு தலைவர்கள் இலங்கைக்கு வந்த வரலாறே இலங்கையில் இல்லை. எனவே எமது அரசாங்கம் தொடர்பில் வெளிநாட்டு சமூகங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளதென்று இதன்மூலம் தெரியவருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகைத் தந்த சீனாவின் வெளிவிவகார அமைச்சருடன் பயனுள்ள வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதம் 12ஆம் திகதி ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் 18ஆம் திகதி பிரித்தானியாவின் அமைச்சரான டரிக் ஆமரும், 19ஆம் திகதி கொரியா நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் இந்த மாத இறுதியில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான உலகத் தலைவர்கள் ஒரே மாதத்தில் இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பம் தனது நினைவுக்கு எட்டிய வகையில் எப்போதும் நடந்ததில்லை எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் மிகவும் பலமிக்க வகையில் இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.