ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ரூ. 5000 இந்த மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு கிடைக்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி 2022 முதல் மாதம் சமுர்த்தி பயனாளிகளும் மேலதிக கொடுப்பனவாக ரூ. 1000 பெறுவதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
(யாழ் நியூஸ்)