டொலர் நெருக்கடிக்கு தீர்வு - எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை தருவதாக கப்ரால் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் நெருக்கடிக்கு தீர்வு - எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை தருவதாக கப்ரால் தெரிவிப்பு!

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் இக்காலகட்டத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்த மின்சாரம் தடைப்படுவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட போதிலும், பின்னர் மத்திய வங்கியின் வாக்குறுதியின் அடிப்படையில் அந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.