ஆர்வத்துக்காக பாடசாலை மாணவிகளின் முடியை வெட்டிய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்வத்துக்காக பாடசாலை மாணவிகளின் முடியை வெட்டிய நபர் கைது!


பண்டாரவளை, ஹீலோயா பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தைக்கு தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் ஊவா பரணகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பண்டாரவளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த நபர், இதற்கு முன்னரும் பல பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களின் முடிகளை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.


சந்தேகநபருக்கு சொந்தமான பையில் இருந்து பல முடி எச்சங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


சந்தேக நபர் திருமணமானவர் எனத் தெரிவித்த அவர்கள், அவர் தனது ஆர்வத்துக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக மேலும் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.